பிர்லியன்ட் குரூப் ஆப் கல்வி நிறுவனம் சார்பில் "வர்ணம் 2017"

கோவையில் செயல்பட்டு வரும் பிர்லியன்ட் குரூப் ஆப் கல்வி நிறுவனம் சார்பில் "வர்ணம் 2017" என்னும் கலை மற்றும் கைவினைப் பொருட்கள் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகளும் பங்கேற்றனர்.



இந்நிகழ்வில் பாரதிய வித்யா பவன் பள்ளி தலைமை ஆசிரியர் சரோஜா பங்கேற்று துவக்கவுரையாற்றினார். இதனைத் தொடந்து, ரேடியோ சிட்டி எஃப்.எம்-யின் புகழ் டோங்கிரி டேவிட் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, குழந்தைகளின் தன்னம்பிக்கை குறித்த தலைப்பில் விஜய் டிவி நியா- நானா புகழ்பெற்ற கோபிநாத் உரையாற்றினார்.

வர்ணம் 2017 நிகழ்ச்சியின் முக்கிய குறிக்கோளே சமூக அக்கரை மற்றும் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவது ஆகும். இந்நிகழ்ச்சி மாணவர்களுக்கு சிறந்த அடித்தளமாக அமைந்தது.



இந்நிகழ்ச்சியில், பிர்லியன்ட் குரூப் ஆப் கல்வி நிறுவனத்தின் பொருளாளர் ராம் கிஷோர், செயலாளர் ஜானகி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து, வர்ணம் 2017 நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...