கோவையில் செயல்பட்டு வரும் பிர்லியன்ட் குரூப் ஆப் கல்வி நிறுவனம் சார்பில் "வர்ணம் 2017" என்னும் கலை மற்றும் கைவினைப் பொருட்கள் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகளும் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் பாரதிய வித்யா பவன் பள்ளி தலைமை ஆசிரியர் சரோஜா பங்கேற்று துவக்கவுரையாற்றினார். இதனைத் தொடந்து, ரேடியோ சிட்டி எஃப்.எம்-யின் புகழ் டோங்கிரி டேவிட் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, குழந்தைகளின் தன்னம்பிக்கை குறித்த தலைப்பில் விஜய் டிவி நியா- நானா புகழ்பெற்ற கோபிநாத் உரையாற்றினார்.
வர்ணம் 2017 நிகழ்ச்சியின் முக்கிய குறிக்கோளே சமூக அக்கரை மற்றும் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவது ஆகும். இந்நிகழ்ச்சி மாணவர்களுக்கு சிறந்த அடித்தளமாக அமைந்தது.

இந்நிகழ்ச்சியில், பிர்லியன்ட் குரூப் ஆப் கல்வி நிறுவனத்தின் பொருளாளர் ராம் கிஷோர், செயலாளர் ஜானகி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து, வர்ணம் 2017 நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாரதிய வித்யா பவன் பள்ளி தலைமை ஆசிரியர் சரோஜா பங்கேற்று துவக்கவுரையாற்றினார். இதனைத் தொடந்து, ரேடியோ சிட்டி எஃப்.எம்-யின் புகழ் டோங்கிரி டேவிட் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, குழந்தைகளின் தன்னம்பிக்கை குறித்த தலைப்பில் விஜய் டிவி நியா- நானா புகழ்பெற்ற கோபிநாத் உரையாற்றினார்.
வர்ணம் 2017 நிகழ்ச்சியின் முக்கிய குறிக்கோளே சமூக அக்கரை மற்றும் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவது ஆகும். இந்நிகழ்ச்சி மாணவர்களுக்கு சிறந்த அடித்தளமாக அமைந்தது.

இந்நிகழ்ச்சியில், பிர்லியன்ட் குரூப் ஆப் கல்வி நிறுவனத்தின் பொருளாளர் ராம் கிஷோர், செயலாளர் ஜானகி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து, வர்ணம் 2017 நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.